search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கிணற்றில் தள்ளி கொலை"

    கந்தர்வக்கோட்டையில் இன்று காலை கல்லூரி மாணவி கழுத்தை இறுக்கி, கிணற்றில் தள்ளி கொலை செய்யப்பட்டார்.

    கந்தர்வக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகே உள்ள வளச்சேரிபட்டியை சேர்ந்தவர் செல்லத்துரை, விவசாயி. இவரது மகள் ஆர்த்தி (வயது 18). இவர் தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டில் உள்ள கலைக்கல் லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

    இதற்காக ஆர்த்தி தினமும் காலை 6 மணிக்கே வீட்டில் இருந்து புறப்படுவார். அவர் வளச்சேரிபட்டியில் இருந்து பஸ்சில் கறம்பக்குடிக்கு சென்று அங்கிருந்து மற்றொரு பஸ் மூலம் ஓரத்தநாடு கல்லூரிக்கு சென்று வருவது வழக்கம்.

    இந்த நிலையில் இன்று காலை 6 மணிக்கு ஆர்த்தி பெற்றோரிடம் கூறிவிட்டு வழக்கம் போல் கல்லூரிக்கு செல்வதற்காக வளச்சேரிப்பட்டி பஸ் நிறுத்தத்திற்கு வந்தார். அப்போது வழக்கமான பஸ்சும் வந்தது. ஆனால் ஆர்த்தியை திடீரென காணவில்லை. அவருடன் தினமும் கல்லூரிக்கு செல்லும் சக தோழிகள் ஆர்த்தியை தேடினர்.

    அப்போது பஸ் நிறுத்தத்தில் இருந்து சுமார் 50 அடி தூரத்தில் உள்ள ஒரு கிணற்றின் அருகே ஒரு பை கிடந்தது. உடனே அங்கு சென்று பார்த்த போது கிணற்றில் ஆர்த்தி பிணமாக மிதந்து கொண்டிருந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் கந்தர்வக்கோட்டை போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று ஆர்த்தி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

    தொடர்ந்து போலீசார் நடத்திய முதல்கட்ட விசாரணையில் துப்பட்டாவால் ஆர்த்தியின் கழுத்தை இறுக்கி கொலை செய்து கிணற்றில் தள்ளி விட்டது தெரியவந்தது. ஆனால் யார் கொலை செய்தார்கள் என்பது தெரியவில்லை. காதல் பிரச்சினையில் ஆர்த்தி கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு எதுவும் காரணமா? என போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    காலை 6 மணிக்கு கல்லூரிக்கு புறப்பட்ட மாணவி 8 மணிக்குள் கிணற்றில் தள்ளி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

    ×